ஜார்க்கண்ட் என்கவுன்டரில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!!

Maoists shot dead

ஜார்க்கண்ட் : மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் 4 மாவோயிஸ்டுகள் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். சைபாசா பகுதியில் இன்று அதிகாலை முதல் போலீசார், மாவோயிஸ்டுகள் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது.

இதில், ஒரு பெண் உட்பட 4 மாவோயிஸ்டுகள் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். டோண்டோ மற்றும் கோயில்கேரா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

சமீபத்தில், சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் 8 மாவோயிஸ்டுகள் மற்றும் சிறப்பு அதிரடிப் படையின் (STF) ஒரு ஜவான் கொல்லப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்