குப்வாரா பயங்கரவாதிகளுக்கும் சி.ஆர்.பி.எப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் 3 சி.ஆர்.பி.எப் படையினர் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் பகுதி குப்ராவிலுள்ள கிரால்குண்ட் வங்கம் – காசியாபாத் என்ற இடத்தில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அவர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
unknown nodeஅப்பொழுது தீவிரவாதிகளில் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டாலும், சிஆர்பிஎஃப் படையினரிலும் மூவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். தமிழகத்தின் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மூன்று வாய்க்கால் என்ற பகுதியைச் சேர்ந்த சந்திர சேகர், மற்றும் அஷ்வினி குமார் யாதவ், சந்தோஷ்குமார் ஆகிய மூவர் தான் உயிரிழந்த வீரர்கள் ஆவார்கள். சண்டை நடந்த இடத்தில் ஒரு 14 வயது சிறுவனின் சடலமும் கிடந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.