பிரசாந்த் பூஷணுக்கு மன்னிப்பு கேட்க 2 நாள் அவகாசம்..!

Default Image

சமீபத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். ஏ பாப்டே இருசக்கர சொகுசு வாகனத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியானது. இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தனது ட்விட்டர் பக்கத்தில், நீதிபதி ஹெல்மெட் அணியாதது குறித்தும், முக கவசம் அணியாதது குறித்தும் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதனையடுத்து, பிரசாந்த் பூஷண் மீது தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் அவமதிப்பு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில், பிரசாந்த் பூஷண் குற்றவாளி என உச்சநீதிமன்றம் கூறி அவருக்கு எந்த மாதிரியான தண்டனை என்பது குறித்து  இன்று  தீர்ப்பு வெளியாகும் என கூறப்பட்டது.

அதன்படி இன்று 2 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் தண்டனை குறித்த வாதத்தின் போது உச்சநீதிமன்ற நீதிபதிகள், பிரசாந்த் பூஷணுக்கு எந்த மாதிரியான தண்டனை வழங்கினாலும், அது பிரசாந்த் பூஷண் தாக்கல் செய்த சீராய்வு மனு மீதான விசாரணைக்குப் பிறகே தண்டனை நிறைவேற்றப்படும் என  அறிவித்தனர்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்க தயார், ஆனால் மன்னிப்பு கேட்க முடியாது என்றும்  வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்தார். இந்நிலையில்,  அவமதிப்பு வழக்கில்  மன்னிப்பு கேட்க உச்சநீதிமன்றம்  பிரசாந்த் பூஷணுக்கு 2 நாள் அவகாசம் அளித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்