ஹரியானாவில் பலாத்காரம் செய்யப்பட்ட 13 வயது சிறுமி கர்ப்பம்!

Default Image

ஹரியானாவில் பலாத்காரம் செய்யப்பட்ட 13 வயது சிறுமி ஆறு மாதம் கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்ததையடுத்து, மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போதைய காலகட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு என்பது இல்லாமல் போய்விட்டது. தெருவில் நடந்து செல்வதற்கு கூட பெண்கள் அஞ்ச வேண்டிய நிலை உள்ளது. ஹரியானாவில் உள்ள யமுன நகரில் வசித்து வரக்கூடிய 13 வயது சிறுமி ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து சிறுமி காப்பாற்றப்பட்டு இருந்தாலும் தற்போது இந்த சிறுமி 6 மாதம் கர்ப்பிணியாக இருப்பது தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து பலாத்காரத்தில் ஈடுபட்ட ஒரு தம்பதியினரும் மற்றொரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைக்கு அடிமையாக உள்ள ஒரு பெண் பணம் சம்பாதிப்பதற்காக ஒரு இளம் வயது வாலிபரை சிறுமியை பலாத்காரம் செய்வதற்கு தூண்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்பொழுது சிறுமி கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் மருத்துவ பரிசோதனைக்கு சிறுமி உட்படுத்தப்பட்டுள்ளதுடன் இந்த குற்றத்தில் சம்பந்தப்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்