ஒன்றரை மாதத்தில் 12 ஆப்ரேஷன் 25 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் -டிஜிபி தில்பாக் சிங்.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
- நேற்று ஸ்ரீநகரில் ஜம்மு காஷ்மீர் மாநில டிஜிபி தில்பாக் சிங் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
- இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் கிட்டத்தட்ட ஒரு 25 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர் என தில்பாக் சிங் கூறினார்.
நேற்று ஸ்ரீநகரில் ஜம்மு காஷ்மீர் மாநில டிஜிபி தில்பாக் சிங் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது காஷ்மீரில் பட்டியலிடப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 250 ஆக குறைந்துள்ளது. அதே நேரத்தில் இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் கிட்டத்தட்ட ஒரு 25 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர்.
இந்த ஆண்டு இதுவரை சர்வதேச எல்லை வழியாக மூன்று பயங்கரவாதிகள் மட்டுமே பள்ளத்தாக்குக்குள் ஊடுருவியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அவர் கூறினார். பட்டியலிடப்பட்ட இராணுவ வீரர்களின் எண்ணிக்கை முன்பு இருந்ததைவிட குறைந்துவிட்டது. சுமார் 240 முதல் 250 பட்டியலிடப்பட்ட இராணுவ வீரர்கள் பள்ளத்தாக்கில் உள்ளனர் என தில்பாக் சிங் கூறினார்.
இந்த ஆண்டு ஒன்றரை மாதங்களில் நடத்தப்பட்ட 12 ஆப்ரேஷன்களில் 25 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதில் காஷ்மீரில் 9 பயங்கரவாதிகளும், ஜம்முவில் 4 பயங்கரவாதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் 40-க்கும் மேற்பட்ட பயங்கரவாத ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தில்பாக் சிங் குறிப்பிட்டார்.