கால்பந்தாட்ட வீரர் டியாகோ மரடோனா மரணம் – அர்ஜெண்டினாவில் 3 நாள் துக்க அனுசரிப்பு!

Football player Diego Maradona's death for deseas, so 3 days of mourning will be observed for player in Argentina.

கால்பந்தாட்ட வீரர் டியாகோ மரடோனா மரணம் – அர்ஜெண்டினாவில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்பந்து அணியின் சிறந்த வீரராக கருதப்படும் அர்ஜென்டாவின் கால்பந்தாட்ட வீரர் டியாகோ மரடோனா அவர்கள் உடல்நல குறைவால் ஏற்கனவே மூளை இரத்தக்கசிவுக்காக அறுவை சிகிச்சை செய்துள்ளார். 60 வயதாகும் இவர், தற்பொழுது மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இவரது மறைவுக்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், அந்நாட்டின் ஜனாதிபதி, எங்களை புகழின் உச்சத்திற்கு அழைத்து சென்று மகிழ்ச்சியடைய செய்ததற்காக நன்றி என தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், இவருக்காக அர்ஜெண்டினாவில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.