கொரோனா தொற்றால் உயிரிழந்த காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் சென்னை அப்போலோ மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தார். அவரின் உடல்நலம் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் இன்று தெரிவித்துள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. ஹச்.வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வசந்தகுமார் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
unknown nodeஅந்த பதிவில், கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமாரின் மறைவுச் செய்தி கேட்டு வேதனையடைந்தேன் என தெரிவித்த அவர், இன்முகம்- பழகுவதற்கு இனியர், கடின உழைப்பாலும் சலியாத முயற்சியாலும் சாதித்துக் காட்டிய வெற்றியாளர் என தெரிவித்த அவர், காங்கிரஸ் கட்சியினருக்கும், வசந்தகுமாரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலும் அனுதாபமும் தெரிவித்து கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.