தேவாலயங்கள் மற்றும் மசூதிகளுக்கான சீரமைப்பு நிதி இந்த ஆண்டு முதல் 5 கோடியாக அதிகரிக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இன்று 74 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் பழனிசாமி அவர்கள் கொடியேற்றி வைத்து உரையாற்றினார். அப்போது சிறப்பாக பணிபுரிந்த பலருக்கு பதக்கங்கள், விருதுகள் வழங்கப்பட்டது.
இந்நிலையில், தேவாலயங்கள் மற்றும் வசதிகளுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் பழுதுபார்ப்பு மற்றும் மறு சீரமைப்பு பணிகளுக்கான நிதி உதவி இந்த ஆண்டு முதல் 5 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என முதல்வர் பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.