அசத்தலான இறால் கிரேவி செய்வது எப்படி?

இறால் கிரேவி செய்யும் முறை.
இன்று பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. அதிலும், மீன், இறால், நண்டு, கனவா மற்றும் இறைச்சி போன்ற உணவுகளை விதவிதமாக செய்து விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் அசத்தலான இறால் கிரேவி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- இறால் – பெரியது 3
- வெங்காயம் – 1
- தக்காளி – 1
- குடை மிளகாய் – ஒன்று
- தேங்காய் பால் – கொஞ்சம்
- பூண்டு – இரண்டு பல்
- கறி மசாலா – 2 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் – ஒன்று
- மல்லித் தழை – தேவைக்கேற்ப
- எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பின் வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். குடை மிளகாயை வட்டமாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
பின் ஒரு சட்டியில் இறாலை போட்டு, அதில் ஒரு தேக்கரண்டி கரம் மசாலா, உப்பு போட்டு தண்ணீர் தெளித்து வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், நசுக்கிய பூண்டு போட்டு வதக்கவேண்டும்.
பின் குடைமிளகாய் போட்டு நன்கு வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் தக்காளி பச்சை மிளகாய் போட்டு கிளற வேண்டும். அத்துடன் தேங்காய் பாலை ஊற்றி கொதிக்க விட வேண்டும். பின் மல்லி தழை சேர்த்து இறக்க வேண்டும். இப்பொது சுவையான இறால் கிரேவி தயார்.