புற்று நோயை குணப்படுத்த உதவும் சாத்துக்குடி.. ஆயுர்வேதத்தில் ஒரு புதிய அப்டேட்!

Default Image

நாம் வெயில் நேரங்களில் உடல் சூட்டைக் குறைக்க அதிகளவில் சாத்துக்குடியை பயன்படுத்துவது பொதுவானதே.

சாத்துக்குடி பழங்களைத் தொடர்ச்சியாக சாப்பிட்டு வரும் போது சரும பிரச்சனைக்கு தீர்வாக அமைகிறது. இதில் உள்ள வைட்டமின் சி, கொலாஜனை உற்பத்தி செய்வதற்கு உதவியாக உள்ளது. எனவே சருமத்தை உறுதியாகவும், வலுவாகவும் வைத்திருக்கும்.

இது தவிர நாம் அறிந்திடாத வேறு சில நன்மைகளும் சாத்துக்குடியில் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றன. அந்த நன்மைகளை பற்றி இந்த தொகுப்பில் நாம் காண்போம்.

சாத்துக்குடியின் நன்மைகள்:

1. ஆரோக்கியமான சருமத்தை ஊக்குவித்தல் :

  • சாத்துக்குடி பழங்களைத் தொடர்ச்சியாக சாப்பிடும் போது சரும பிரச்சனைக்கு தீர்வாக அமைகிறது.
  • மேலும் இந்த பழத்தில் எலுமிச்சையில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகளவில் உள்ளது.
  • எனவே நாம் தொடர்ச்சியாக சாப்பிடும் போது வயதான சருமத்தை விரைவில் நாம் அடைவதை தடுக்கவும் உதவுகிறது.

2. புற்றுநோய் அபாயத்தைக் குறைத்தல்:

  • மொசாம்பியா எனப்படும் சாத்துக்குடியில் புற்றுநோயைத் தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளைக் கொண்டுள்ளது.
  • எனவே தொடர்ச்சியாக நாம் சாத்துக்குடி ஜுஸை சாப்பிடும்போது புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

3. செரிமான பிரச்சனைக்குத் தீர்வு:

  • சாத்துக்குடியில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அமிலங்கள் மற்றும் பித்த சுரப்பை அதிகரிப்பதன் மூலம் செரிமான மண்டலத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.
  • இதில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமான மண்டலத்தை சீராக்குவதோடு தேவையற்ற நச்சுகளை அகற்றவும் உதவுகிறது.
  • இதோடு சாத்துக்குடி ஜூஸில் சிட்ரஸ் அமிலங்கள் அதிகளவில் இருப்பதால், சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவுகிறது.
  • சாத்துக்குடியில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அதிகளவில் இருப்பதால் கண்புரை உருவாகும் வாய்ப்பை குறைக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்