கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இன்று பள்ளிகள் திறப்பு!

Schools in Cuddalore and Villupuram districts remained open today due to rains.

மழையால் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகள் திறக்காத நிலையில், இன்று திறக்கப்பட்டன.

கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. தமிழகத்தில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மழை காரணமாக கடலூர், விழுப்புரத்தில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் அம்மாவட்டங்களில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன என்பது குறிப்பிடப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த பிறகு தமிழக அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை படிப்படியாக அளித்து வந்தது. இதில், பள்ளிகள், கல்வி நிலையங்கள் திறக்க திறக்கப்பட்டது. முதல் கட்டமாக ஒன்பதாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.

இந்த சமயத்தில் பண்டிகை விடுமுறை மற்றும் தொடர் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இனி தமிழகத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் திறக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.