#BreakingNews : நிவர் புயல் எதிரொலி – சென்னை விமான நிலையம் மூடல்

Due to Cyclone Nivar, aircraft operations at Chennai Airport will remain suspended from 7 pm today to 7 am tomorrow.

நிவர் புயல் காரணமாக சென்னை விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஆகவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.மேலும் பேருந்து சேவை ,ரயில்கள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை  சென்னை விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு ,வெளிநாட்டு சேவைகள் ரத்து செய்யப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

unknown node