நீரினால் தீபம் ஏற்றுவது ஜலதீபம் என கூறப்டுகிறது.
இந்த ஜலதீபமானது குபேரருக்கு மிகவும் உகந்தது. அதனால் குபேர ஜலதீபம் என அழைக்கப்படுகிறது.
ஜலம் என்றால் தண்ணீர் என்பது நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும். அதனால் ஜலதீபம் என்பது தண்ணீரில் ஏற்றி வைக்கப்படும் தீபமே. தண்ணீரில் தீபம் ஏற்றி வைப்பது சுலபமான காரியமல்ல என நமக்கு தெரியும். அதனை சில வழிமுறைகளை கொண்டு நிறைவேற்றலாம். இந்த ஜலதீபமானது குபேரருக்கு மிகவும் உகந்ததாகும். அதனாலே இது குபேர ஜலதீபம் என அழைக்கப்படுகிறது.
unknown nodeஒரு நல்ல தட்டை எடுத்து கொண்டு அதனை மலர்களால் அலங்கரித்து விட்டு, பின்னர், ஒரு கண்ணாடி டம்ளரில் பாதி அளவு தண்ணீர் வைத்து கொள்ள வேண்டும். அதன் மேல் நல்லெண்ணெய் அல்லது விளக்கு ஏற்றுவதற்கு உகந்த எண்ணெய் ஊற்றி வைக்க வேண்டும். தண்ணீரும் எண்ணெயும் ஒன்று சேராது. அதனால் எண்ணெய் மேலே இருக்கும். பின்னர், எண்ணெயில் ஊற வைத்த விளக்கு திரியை அதன் மேல் வைக்கவேண்டும்.
தண்ணீரில் திரி மூழ்காமல் இருக்க வெற்றிலை வைத்து அதன்மீது திரியை வைக்கலாம். இது திரியை உள்ளே மூழ்கி தீபம் அணைவதை தடுக்கும்.
unknown nodeஇந்த குபேர ஜல தீபத்தை வியாழக்கிழமை ஏற்றவேண்டும். வியாழக்கிழமை குபேரனுக்கு மிகவும் உகந்த நாள். அன்றைய நாள் மாலை இந்த தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, வெள்ளி, சனி என மூன்று நாட்கள் தொடர்ந்து எரியவிட வேண்டும். அதனை அணையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு நீங்கள் தொடர்ந்து பூஜை செய்யும் போது, அந்த ஜலதீபத்தின் ஒளியானது உங்கள் வீட்டில் நேர்மறையான ஆற்றலை கொடுக்கும். எதிர்மறையான ஆற்றல்களை தகர்த்துவிடும். வீட்டில் அமைதி நிலவும். உங்கள் மன உளைச்சலை கட்டுப்படுத்தி குறைந்திருப்பதை நீங்களே உணர்வீர்கள். இந்த பூஜையை முழுமனதுடன் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.