திருவள்ளுர் யோக ஞான தட்சணாமூர்த்தி கோவிலில் பாலாபிஷேகம்

This news gives information about Balabhishekam in Thiruvallur Yogan Vishana Dakshinamurthy temple-thiruvaloor yokagnana thatsanamoorthy kovilil palabisekam

தட்சிணாமூர்த்தி, அறுபத்து நான்கு சிவத்திருமேனிக்குள் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும். தட்சிணம் என்றால் தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் கொள்ளலாம். த-அறிவு, க்ஷ-தெளிவு, ண-ஞானம் என இம்மூன்றும் அவற்றின் பொருளாகும்.

தட்சிணாமூர்த்தியை தென் திசை கடவுள் என்று  குறிப்பிடுகின்றார்கள். சிவன் கோவில்களில்  கருவறையின் தென் சுவரின் வெளிப்புறத்தில் இவ்வடிவம் காணப்படுகிறது. தட்சிணாமூர்த்தியை குரு என்ற பெயரிலும் அழைக்கின்றார்கள்.பஞ்ச குண சிவமூர்த்திகளில் தட்சிணாமூர்த்தி சாந்த மூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.

திருவள்ளூரை அடுத்த பூங்கா நகர் ஸ்ரீயோகா ஞான தட்ணாமூர்த்தி கோவிலில் உள்ள குரு பகவான் சன்னதியில் கடந்த வியாழக்கிழமை காலை 10 மணிக்கு 108 லிட்டர் பால் அபிஷேகம் நடை பெற்றது.

அதற்கு பிறகு இவருக்கு மலர் அலங்காரம் செய்யபட்டு சிறப்பு பூஜைகளும் நடை பெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை  தரிசனம் செய்தனர். மேலும் பல சிவன் கோவில்களிலும் தட்சணா மூர்த்திக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன