பாட்டையா என்றழைக்கப்படும் எழுத்தாளர் பாரதி மணி காலமானார் ....!

Bharathi Mani, a writer known as Pattaya, has passed away due to old age.

பாட்டையா என்றழைக்கப்படும் எழுத்தாளர் பாரதி மணி வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்துள்ளார்.

நாகர்கோவில் அருகே உள்ள பார்வதிபுரத்தில் 1937ஆம் ஆண்டு பிறந்தவர் தான் பாரதி மணி. இவருக்கு தற்போது 84 வயது ஆகிறது. தனது இளமைக் காலங்களில் நாடகங்களில் நடித்த மணி, அதன்பின் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் பாரதியாரின் வாழ்க்கை வரலாறு படமான பாரதியில் பாரதியாருக்கு தந்தையாக நடித்ததால் பாரதி மணி என அழைக்கப்படுகிறார். மேலும் இவரை பட்டையா எனவும் அவரது ரசிகர்கள் அழைக்கின்றனர். நடிகரும், எழுத்தாளருமாகிய இவர் வயது முதிர்வின் காரணமாக தற்பொழுது உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.