இளையராஜா ஒருநாள் தியானம் செய்ய ஏன் அனுமதிக்க கூடாது? – உயர்நீதிமன்றம்

The High Court has questioned Prasanth Studio as to why Ilayaraja should not be allowed to meditate one day at Prasanth Studio.

இளையராஜா பிரசாந்த் ஸ்டுடியோவில் ஒருநாள் தியானம் செய்ய ஏன் அனுமதிக்க கூடாது என பிரசாந்த் ஸ்டுடியோவிற்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இசைஞானி இளையராஜா சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் தான் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக பல திரைப்படங்களுக்கு இசையமைத்திருந்தார்.சமீபத்தில் ஸ்டுடியோவின் உரிமையாளர்கள் இளையராஜாவை வெளியேற்றியதுடன், தனது இசை குறிப்புகளை சேதப்படுத்தியதாக கூறி வழக்கு தொடர்ந்திருந்தார்.

தற்போது இளையராஜா அவர்கள் பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து தனக்கு சொந்தமான பொருட்களை கூட எடுக்க விடாமல் வெளியேற்றியது நியாயமில்லை. இதனால் தான் மன உளைச்சலுக்கு ஆளாகியதாகவும், எனவே தன்னை ஸ்டுடியோவில் இருந்து வெளியேற்றியதற்காக ரூ.50 லட்சம் இழப்பீட்டு தொகை கொடுக்குமாறு ஸ்டுடியோ உரிமையாளர்களான சாய் பிரசாத் மற்றும் ரமேஷ் ஆகியோருக்கு உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், இளையராஜா தரப்பில், 40 ஆண்டுகளாக இளையராஜா பிரசாந்த் ஸ்டுடியோவில் பணியாற்றியதால், ஒருநாள் தியானம் செய்துவிட்டு பொருட்களை எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, இளையராஜா பிரசாந்த் ஸ்டுடியோவில் ஒருநாள் தியானம் செய்ய ஏன் அனுமதிக்க கூடாது என பிரசாந்த் ஸ்டுடியோவிற்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.