ரஜினி சாரின் கட்டளையை மீறி விட்டோம்! – இயக்குனர் பேரரசு

Default Image

ரஜினி சாரின் கட்டளையை மீறி விட்டோம் என இயக்குனர் பேரரசு ட்வீட்.

இந்தியாவில் கொரோனா  தீவிரமாக பரவி வருகிற நிலையில்,  கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகிறது. இதனால், இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு மாதகாலமாக வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர்.

இதனையடுத்து, பிரபலங்கள் பலரும், பலருக்கு நிதியுதவி வழங்கி வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசிமூட்டை, மளிகை பொருட்கள் வழங்கும் போது, பத்திரிக்கைகளை அழைக்கவோ, செய்தி கொடுக்கவோ வேண்டாம் என நிபந்தனை கொடுத்துள்ளார்.

ஆனால், இதுகுறித்து இயக்குனர் பேரரசு அவர்கள், இவ்வாறு ரஜினி கூறியது அவரின் பெருந்தன்மையாக இருக்கலாம். பெற்ற உதவியை நாங்கள் எப்படி சொல்லாதிருப்பது. ரஜனி சாரின் கட்டளையை மீறி விட்டோம் என தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்