பொள்ளாச்சி சம்பவம் குறித்து நடிகர் விஷாலின் கருத்து !!!!!

Default Image
  • பொள்ளாச்சியில் பெண்கள் 200 பேரை 20 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் நாட்டையே பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
  • இந்நிலையில் தற்போது இது குறித்து நடிகர் விஷால் அவரது ட்விட்டர் பகுதியில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். குற்றவாளிகளுக்கு  மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் ” என்று விஷால் வலியுறுத்தியுள்ளார்.

நடிகர் விஷால் தற்போது “அயோக்கியா” படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த படம் வரும் கோடை விடுமுறைக்கு திரைக்கு வர இருக்கிறது.

பொள்ளாச்சியில் பெண்கள் 200 பேரை 20 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் நாட்டையே பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வழக்கில் தற்போது  5 நபர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் தற்போது பல மாணவ அமைப்பினரும், பல மகளிர் அமைப்பினரும் தொடர்ந்து போராட்டங்கள் நடித்தி வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது இந்த சம்பவம் குறித்து பல பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது இது குறித்து நடிகர் விஷால் அவரது ட்விட்டர் பகுதியில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். ” பொள்ளாச்சி குற்றவாளிகள் யாராக இருந்தாலும்,அந்த நபர்கள் எவ்வளவு அதிகாரம் படைத்தவர்களுடன் தொடர்பில் இருந்தாலும் அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் அந்த குற்றவாளிகளுக்கு  மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் ” என்று விஷால் வலியுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்