'மஹாவீர் கர்ணா' படத்திலிருந்து விலகிய விக்ரம்.! புது டைட்டிலுடன் பிரமாண்டமாக உருவாக்க முனையும் இயக்குனர்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

It has been announced that Mahavir Karna will be directed by RS Vimal under the title 'Suryaputra Mahavir Karna'.

மஹாவீர் கர்ணா படத்தினை தற்போது ‘சூர்யபுத்ரா மஹாவீர் கர்ணா’ என்ற பெயரில் பிரமாண்டமாக ஆர்.எஸ்.விமல் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில், ‘என்னு நிண்டே மொய்தீன்’ எனும் படத்தை இயக்கிய பிரபலமான ஆர்.எஸ்.விமல் கடந்த 2018-ம் ஆண்டு தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டார்.சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக இயக்கும் ‘மஹாவீர் கர்ணா’ என்று பெயரிடப்பட்ட அந்த படத்தில் விக்ரம் மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ள கர்ணன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டது.

தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாக உள்ளதாக கூறப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு சில நாட்கள் மட்டுமே நடைபெற்றது.அதன் பின் விக்ரம் கோப்ரா , பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடிக்க சென்றதால் மஹாவீர் கர்ணா கைவிடப்பட்டதாக கூறப்பட்டது.

தற்போது அந்த திரைப்படத்தினை குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.அதாவது மஹாவீர் கர்ணா படத்தினை தற்போது ‘சூர்யபுத்ரா மஹாவீர் கர்ணா’ என்ற பெயரில் பிரமாண்டமாக உருவாக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் உருவாகவுள்ள இந்த படத்தினை ஆர்.எஸ்.விமல் இயக்க குமார் விஷ்வாஸ் என்பவர் வசனம் , திரைக்கதை எழுத உள்ளதாக அறிவித்துள்ளது.அதற்கான வீடியோவையும் தயாரிப்பு நிறுவனமான பூஜா என்டர்டெயின்மென்ட் வெளியிட்டுள்ளது .மேலும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதிலிருந்து இந்த பிரமாண்ட படத்திலிருந்து விக்ரம் விலகி உள்ளது உறுதியாகிறது.

unknown node