கலைஞருக்கு விழா நடத்திய விஜயகாந்த்! அவருக்கு இப்படி செய்திருக்க கூடாது உருகிய தியாகு….

Thiyagu - Vijayakanth

Vijayakanth: 2007-ல் சென்னை ஜவஹர்லால் நேரு சாலையில் அமைந்திருந்த விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்குச் சொந்தமான மண்டபம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த மண்டபம் நேரு சாலை-பெங்களூரு நெடுஞ்சாலை சந்திப்பில் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் மேம்பாலம் கட்டும் திட்டத்தை காரணம் காட்டி இடிக்கப்பட்டது.

READ MORE – நண்பர் அம்மாவின் இறந்த செய்தி…500 காரில் வந்த விஜயகாந்த்! ஸ்தம்பித்து போன காவல் துறை!

இந்த சம்பவம் குறித்து விஜயகாந்த் மறைந்த பின், அவரது நெருங்கிய நண்பரான தியாகு, திமுக ஆட்சி வந்ததும் விஜகாந்த் கட்சி ஆரம்பிக்க போவதாக தெரிந்த்ததும் அவரது மண்டபம் இடிக்கப்பட்டது குறித்து நினைவுபடுத்தினார்.

இது குறித்து அவர் பேசுகையில், “ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கலைஞருக்கு பொன்விழா எடுத்தோம்… அப்போது விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்தார். இந்த விழாவை எடுப்பதாக கூறிவிட்டு ஏவிஎம் சரவணன் போய்ட்டாரு. ஜெயலலிதா அம்மா கோவ பாடுவாங்க என்று கூறி பயந்துட்டாங்க.

READ MORE – விஜயகாந்தை பார்த்தாலே பயப்பட காரணம் என்ன? பொன்னம்பலம் பதில்!

அப்போ, ராம நாராயணன், அழகப்பன், சந்திர சேகர் அவர்களுடன் நானும் சென்றேன், விஜயகாந்திடம் நான் சொன்னேன். அவனும் ஒகே நம்ம நடத்துவோம் என்று சொன்னான். அப்போது, மனோரமா ஆச்சி எனக்கு போன் பண்ணுது, தம்பி அம்மா கொச்சிக்கும் தம்பி தேவை இல்லாமல் கொச்சிக்காதிங்க தம்பின்னு சொன்னுச்சி. விஜயகாந்த் கேக்கவே இல்லையே நான் நடத்திய தீருவேன் என்று சொன்னான்.

READ MORE – MGR மனைவி கொடுத்த பரிசு.! மேடையில் உணர்ச்சிவசப்பட்ட கேப்டன் விஜயகாந்த்.!

என்ன பிரச்சனை வந்தாலும் சரி நடத்துவோம் என்று கூறி, பொன் விழா நடத்தப்பட்டது. விஜயகாந்த் தரப்பில் 5 லட்சம் பேர் கூட்டினார். 10 லட்ச மதிப்பீட்டில் தங்க பேனாவை பரிசாக கொடுத்தார். கலைஞரை பீச் வர கூப்பிட்டு வந்து கோட்டையில் உக்கார வச்சி பாத்தாரு. அப்பேறு பட்ட மனுஷனின் மண்டபத்தை இடிக்கலாமா என்று உருக்கமாக கேட்டார் நடிகர் தியாகு.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்