நடிகர் விஜய் தேவரகொண்டா வருடம் வருடம் கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களுக்கு ஏதாவது பரிசு அளிக்கும் வழக்கத்தை வைத்துள்ளார். தனது கடைசிப் பெயரிலிருந்து தேவரவையும், சாண்டா கிளாஸில் இருந்து சாண்டாவையும் இணைத்து, சில வருடங்களுக்கு முன்பு ‘தேவராசாந்தா’ என்ற பாரம்பரியத்தைத் தொடங்கினனார்.
unknown nodeVijay Deverakonda [Image Source : Twitter /Vijay Deverakonda]
(#தேவரசந்தா) அதன்மூலம், விஜய் தேவரகொண்டா தனது ரசிகர்களுக்கு கிருஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக்குவதற்காக ஒவ்வொரு ஆண்டும் புதிய மற்றும் அற்புதமான பரிசுகளுடன் வருகிறார். அந்த வகையில், இந்த ஆண்டு #Deverasanta2022 திட்டம் பெரியதாக உள்ளது, ஏனெனில் 100 ரசிகர்களுக்கு அனைத்து செலவையும் செலுத்தி பயணங்களை ஏற்பாடு செய்ய அவர் திட்டமிட்டுள்ளார்.
unknown nodeVijay Deverakonda [Image Source : Twitter /Vijay Deverakonda]
இந்த அறிவிப்பு, இயல்பாகவே, அவரது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் டிவிட்டரில் கூறியிருப்பதாவது, “”#தேவேராசாந்தா, 5 வருடங்களுக்கு முன்பு நான் ஆரம்பித்த ஒரு பாரம்பரியம். இந்த வருடம் எனக்கு இதுவரை நல்ல யோசனை உள்ளது.
இதையும் படியுங்களேன்-ஒருத்தர் கூட வரலையா..? படம் பார்க்க நினைத்து ஏமாற்றமடைந்த நயன்தாரா.!
unknown nodeVijay Deverakonda [Image Source : Twitter /Vijay Deverakonda]
உங்களில் 100 பேரை அனைத்து செலவுகளும் செலுத்தி விடுமுறைக்கு அனுப்ப உள்ளேன். சேருமிடத்தைத் தேர்ந்தெடுக்க எனக்கு உதவுங்கள். என பதிவிட்டு அதன் கீழே இந்திய மலை பகுதிகள், இந்திய கடற்கரை பகுதிகள், இந்திய கலாசார சுற்றுலா, இந்தியாவின் பாலைவனம் ஆகிய சுற்றுலாவுக்கான 4 பொதுவான இடங்களை குறிப்பிட்டு உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சரியான இடத்தைத் தேர்வுசெய்ய வாக்களித்து வருகிறார்கள்.