அமீர் இயக்கத்தில் படம் வெளியாகி பல வருடங்கள் ஆகியது. மிழ் சினிமாவிற்கு பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த அந்த இயக்குனர் அமீரை பல வருடங்களாக காணவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், மீண்டும் இயக்குவதில் களமிறங்கவுள்ளார். ஆம்.. அதில், ரொம்ப நாட்களாக கிடப்பில் கிடக்கும் சந்தனதேவன் திரைப்படம் மீண்டும் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
unknown nodeஇதற்கிடையில், வாடிவாசல் திரைப்படத்தில் அமீர் முக்கியான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது, இதனை தொடர்ந்து தற்போது வெற்றி மாறன் மற்றும் அமீரும் சேர்ந்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளனர்.
இதையும் படியுங்களேன்-சரக்கு சாம்ராஜ்யத்தின் மஹாராஜா, எங்க அப்பன்.! அனல் பறக்கும் ‘விக்ரம் – துருவ்’ ஆட்டம்.!
சரி அதெல்லாம் இருக்கட்டும்… இப்போ ஆர்யா நாயகனாக நடிக்க உள்ள அப்படத்தின் வேலைகளை இயக்குனர் அமீர் கவனித்து வருகிறார். அதே போல, அமர காவியம் பட ஹீரோவும் ஆர்யா தம்பியான நடிகர் சத்யா புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்ட்டுள்ளாராம். அந்த படத்தையும் அமீர் தான் இயக்குகிறார் என்ற தகவல் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
unknown nodeஆனால், இது அது உண்மையா என்று தெரியவில்லை. ஆனால், அந்த படத்தை ஆர்யா தான் தயாரிக்கிறார் என்பது மட்டும் உறுதி ஆகியுள்ளது. இவர் நடித்து வெளியாகிய அமர காவியம் படம் வசூல் ரீதியாக பெரியதாக சாதனை படிக்கவில்லை என்பதால் வேறு எந்த தயாரிப்பு நிறுவனம் முன் வரவில்லையா என்று தெரியவில்லை தம்பியை தூக்கி நிப்பாட்டுவதற்கு அண்ணன் ஆர்யா களமிங்கியுள்ளார்.
unknown node