தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை மக்களுக்கு கொடுப்பதில் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் வெளியான 7ஜி ரெம்போ காலனி, புதுப்பேட்டை ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்கள் இப்பொது பார்த்தால் கூட அணைத்து ரசிகர்களுக்கு பிடிக்கும்.
unknown nodeஇதில், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களின் இரண்டாம் பாகத்திற்கு ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். ஆனால், ஆயிரத்தில் ஒருவன் 2 படம் வரும் 2024-ஆம் ஆண்டு உருவாகும் எனவும், அதில் தனுஷ் ஹீரோவாக நடிப்பார் எனவும் செல்வராகவன் கடந்த ஆண்டே அறிவித்து விட்டார்.
unknown nodeஆனால், புதுப்பேட்டை 2 குறித்து இதுவரை பேசாத செல்வராகவன் நேற்று சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் செய்தியாளர்களை சந்தித்த போது பேசியுள்ளார். அதில் பேசிய அவர் ” முதலில் புதுப்பேட்டை 2 தான் வரும். அடுத்தது தான் ஆயிரத்தில் ஒருவன் 2″ என கூறியுள்ளார்.
unknown nodeஇதனை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்துடன் உள்ளார்கள். மேலும், ஏற்கனவே தனுஷ் -செல்வராகவன் கூட்டணியில் நானே வருவேன் படம் தயாராகி வருகிறது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படவுள்ளது குறிப்பிடதக்கது.