உருவாகும் வாழை-2 ..மையக்கரு இதுதான்! மேடையில் போட்டுடைத்த மாரி செல்வராஜ்!

‘வாழை’ திரைப்படத்தின் வெற்றி விழாவில், பல கேள்விகளுக்கும் பதிலளித்து, வாழை 2 குறித்தும் அப்டேட் கொடுத்துள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.  

Vaazhai2 - MariSelvaraj

சென்னை : இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான “வாழை” திரைப்படம்  விமர்சன ரீதியாக மட்டுமல்ல, பாக்ஸ் ஆபிஸிலும் வெற்றி பெற்றது. இந்த நிலையில், ‘வாழை’ திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில், பல கேள்விகளுக்கும் பதிலளித்து, வாழை 2 குறித்தும் அப்டேட் கொடுத்துள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ். வெற்றி விழாவில் பேசிய அவர், என்னுடைய தந்தையும், தாயும் என்னை ஏன் இப்படி கஷ்டப்படுத்துகிறார்கள் என்று எண்ணிய நான், முப்பது ஆண்டுகளில் இங்கே வந்து இந்த கலையின் மூலம் எனக்கும் என் அம்மாவுக்கும் உள்ள உறவைப் புரிந்துகொண்டேன்.

என் அம்மாவும் இத ஏற்றுக்கொண்டதற்குக் கலைதான் காரணம். இந்தக் கலைக்குத் தொடர்ந்து உண்மையாகவே இருப்பேன். கலையால் சாத்தியமில்லாதது எதுவும் கிடையாது என நம்புகிறேன்.

இன்று இல்லையெனில் என்றைக்காவது அத்தனை மக்களையும் நான் வென்றே தீருவேன், வெற்றி பெறுவேன். முட்டி மோதி வந்திருக்கிறேன், என்னிடம் நிறைய கதைகள் இருக்கிறது அத்தனை கதைகளும் சொல்லிவிட்டுதான் போவேன் என்று கூறியுள்ளார்.

மாரி செல்வராஜ் யார் என்று தெரிந்துகொள்ள எடுக்கப்பட்ட படம்தான் வாழை, இதுவும் உங்களுக்கு குழப்பமாக இருக்கிறது என்றால், திருப்பி ‘வாழை-2’ எனும் படத்தை நிச்சயமாக எடுப்பேன். இதற்குப் பின்னால் இருக்கும் கதையை சிவனணைந்தனை வைத்து உருவாக்குவேன். அது என்னை இன்னும் ஆழமாக நீங்கள் புரிந்துகொள்ள உதவும் என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்