நீங்கள் வாழ்வில் செய்த மிகப்பெரிய தவறு என்ன? சமந்தா சொன்ன பதில்!

நடிகை சமந்தா தற்போது பெரிய அளவில் தொடர்ச்சியாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் ரசிகர்களுடன் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்துகொண்டு வருகிறார். அந்த

samantha

நடிகை சமந்தா தற்போது பெரிய அளவில் தொடர்ச்சியாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் ரசிகர்களுடன் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்துகொண்டு வருகிறார். அந்த வகையில், சமந்தா சமீபத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சமந்தா பதில் அளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் வாழ்வில் செய்த மிகப்பெரிய தவறு என்ன என்று கேட்டார்.

அதற்கு பதில் அளித்த நடிகை சமந்தா “என்னுடைய விருப்பம் மற்றும் என்னுடைய வெறுப்புகளை அறியாமல் இருப்பது என்னை பொறுத்தவரை என்னுடைய வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறுகளில் ஒன்று. எனக்கு அந்த சமயம் என்னுடன் இருந்த துணையால் விருப்பு வெறுப்புகள் மிகவும் பாதித்தது.

அன்னபூரணி திரைப்பட விவகாரம் – வருத்தம் தெரிவித்த நடிகை நயன்தாரா!

அதன் பிறகு நான் என்னுடைய வாழ்க்கையில் மிகவும் கடினமான சமயங்களில் கற்றுக் கொண்ட முக்கிய பாடம் என்னவென்றால், தனிப்பட்ட வளர்ச்சியை தான் சொல்வேன்” எனவும் நடிகை சமந்தா கூறியுள்ளார்.சமந்தா கூறியுள்ளதை பார்த்த சிலர் நாக சைதன்யா மறைமுகமாக குறிப்பிட்டு தான் பதிவிட்டு இருக்கிறார் என கூறி வருகிறார்கள்.

மேலும், நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பிறகு இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021-ஆம் ஆண்டு இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்றுக்கொண்டதாக அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.