என்னை வாழ வைத்த தமிழ் மக்களுக்கு நன்றி – விருதை பெற்ற பின் ரஜினிகாந்த் பேச்சு

Default Image

கோவா திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.

கோவாவில் 50வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது.இந்த  விழாவை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு ICON OF GOLDEN JUBILEE என்ற விருது வழங்கப்பட்டது. இதன் பின்னர் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில்,இந்த விருது கிடைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் இந்த விருது கிடைப்பதற்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் ரசிகர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.மத்திய அமைச்சர் பிரகாஷ்ஜவடேகர், கோவா முதல்வர்,எனக்கு முன்மாதிரியாக திகழும் அமிதாப்பச்சனுக்கு நன்றி.”என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி” என்றும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்