‘கங்குவா’ திரைப்படத்திற்கு கூடுதல் காட்சிக்கு அனுமதி.!

நடிகர் சூர்யாவின் ‘கங்குவா' திரைப்படத்திற்கு நவம்பர் 14ம் தேதி மட்டும் கூடுதலாக ஒரு காட்சி திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. '

kanguva tn govt

சென்னை : இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான “கங்குவா” படத்தில் சூர்யாவை தவிர நடிகை திஷா பதானி, ஜகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ஜி மாரிமுத்து, ரவி ராகவேந்திரா, கேஎஸ் ரவிக்குமார், ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நடிகர் சூர்யா நடிபப்பில் உருவான இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நவ.14ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்நிலையில், இப்படம் திரையரங்குகளில் வெளியாக நாளை ஒரு மட்டுமே உள்ள நிலையில், படத்திற்கு சிறப்புக் காட்சி திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, காலை 9 மணி முதல் மறுநாள் நள்ளிரவு 2 மணி வரை அதிகபட்சமாக 5 காட்சிகள் திரையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 14 மற்றும் 15ம் தேதி ஆகிய நாட்களுக்கு கூடுதலாக இரண்டு காட்சிகளை காலை 5 மணி முதல் இரவு 2 மணி வரை திரையிட அனுமதி அளிக்கும்படி, படத் தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை வைத்திருந்தநிலையில், படம் வெளியாகும் (நவ.14ஆம் தேதி) அன்று ஒரு நாள் மட்டும் கூடுதலாக ஒரு காட்சிக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

காலை 9 மணி முதல் மறுநாள் நள்ளிரவு 2 மணி வரை அதிகபட்சமாக 5 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்படுகிறது. இந்நிலையில், திரைப்படம் காண்போரின் போக்குவரத்து பாதிக்கப்படாத வகையிலும், காவல் துறையினரின் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு பெறுவதற்கு தக்க ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும் .

மக்கள் மற்றும் பார்வையாளர்கள் திரளாக உள்ளே வரவும், சிரமமின்றி வெளியேறவும். திரையரங்கத்தினை சுத்தம் செய்து சுகாதாரமாக பராமரிக்கவும். போதுமான இடம் மற்றும் கால இடைவெளியுடன் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறித்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 29032025
TN Police - ENCOUNTER
Kohli Angry On Khaleel
earthquake - helpline
C Voters survey -MK Stalin TVK Vijay EPS Annamalai
Hardik Pandya
TVK Leader Vijay - Edappadi palanisamy