சன்னி லியோன் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயா….

Default Image

பாலிவுட் நடிகை சன்னி லியோன் தற்போது இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயாகியுள்ளதாக  அறிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை சன்னி லியோன் தனது கணவர் டேனியல் வெபருடன் வசித்து வருகிறார். இவர்கள் ஏற்கெனவே மகாராஷ்டிர மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட லாத்தூரில் இருந்து நிஷா கவுர் என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.

இதையடுத்து, தங்களுக்கு இரு ஆண் குழந்தைகள் பிறந்திருப்பதாக நடிகை சன்னி லியோனும் அவரது கணவரும் இன்று அறிவித்துள்ளனர். குழந்தைகளுக்கு நோவா சிங் வெபர் மற்றும் அஷெர் சிங் வெபர் என பெயர் சூட்டியுள்ளதாவும் கூறியுள்ளனர்.

நடிகை சன்னி லியோன் தனது ட்விட்டர் பதிவில், “திருமண வாழ்க்கையில் குறுகிய காலத்திலேயே மூன்று குழந்தைகளுக்குப் பெற்றோர் ஆகப்போகிறோம் என்பதை நானும் டேனியல் வெபரும் ஜூன் 21-ம் தேதிதான் தெரிந்துகொண்டாம்” என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.இந்த குழந்தைகளை வாடகைத் தாய் மூலம் பிறந்தவை என்பது குறிப்பிடதக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்