பிளாப் ஆன சுந்தர் சி படம்…தேம்பி தேம்பி அழுத குஷ்பு மகள்!

kushboo

சுந்தர் சி : அரண்மனை 4 எனும் மெகா ஹிட் படத்தை கொடுத்துள்ள சுத்தர் சி இந்த படத்திற்கு முன்னதாக காபி வித் காதல் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறாமல் வசூல் ரீதியாகவும் தோல்வியை சந்தித்தது.

இந்த படத்தின் தோல்வியை  தொடர்ந்து ஹிட்  கொடுத்தே ஆகவேண்டும் என்ற நோக்கத்தோடு சுந்தர் சி அரண்மனை 4 படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார். இருப்பினும், காபி வித் காதல் திரைப்படத்தினை குஷ்பு தயாரித்திருந்தார். எனவே, படம் தோல்வி ஆனதை பார்த்து அவருடைய மகள் அனந்திதா கதறி அழுதுள்ளார்.

இந்த சம்பவத்தை நடிகை குஷ்பு சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய நடிகை குஷ்பு ” சுந்தர் சி அரண்மனை 4 படத்திற்கு முன்னதாக காபி வித் காதல் படத்தை இயக்கி இருந்தார். அந்த படம் எனக்கும் என்னுடைய மகள்களுக்கும் பிடிக்கவே இல்லை. படம் வெளியான பிறகு என்னுடைய இளைய மகள் அனந்திதா கதறி அழுதார்.

என்னுடைய மகள் தேம்பி தேம்பி அழுத காரணத்தால் கண்டிப்பாக ஒரு ஹிட் படத்தை கொடுத்த ஆகவேண்டும் என்ற நோக்கத்தோடு தான் சுந்தர் சி அரண்மனை 4 படத்தை இயக்க திட்டமிட்டு கதை எழுத தொடங்கினார். 1.5 ஆண்டுகள் அந்த படத்திற்காக வேலை செய்து மகளுக்காக படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார்” எனவும் குஷ்பு தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்