பிரபல தமிழ் நடிகை ஸ்ரீதேவி மரணத்திற்கு பிறகு அவரை பற்றிய நிறைய செய்திகள் வெளியாகியுள்ளது. சினிமா மட்டுமின்றி சொந்த வாழ்க்கை விஷயங்களும் வெளிவருகின்றது .
ஸ்ரீதேவியை ,போனி கபூர், திருமணம் செய்து கொண்ட பின் அவரது முதல் மனைவி மகன் மற்றும் மகள் இருவரும் போனி கபூரை விட்டு பிரிந்திருந்தனர். தற்போது ஸ்ரீதேவி மறைவிற்கு பின் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூர் மீண்டும் தன்னுடைய தந்தையுடனேயே ஒரே வீட்டில் இருக்க முடிவு செய்திருக்கிறாராம்.
அவர் ஸ்ரீதேவி மகள்களுக்கும் ஆதரவாக இருக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அர்ஜுன் கபூர் எப்போதும் தங்களுடன் இணையவே மாட்டார் என்று நினைத்த ஸ்ரீதேவியின் எண்ணம் அவரது மறைவிற்கு பிறகு மாறியிருக்கிறது.