அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு என தரமான நல்ல படங்களை இயக்கியவர் தங்கர்பச்சான். இவர் கடைசியாக பிரபு தேவா நாயகனாக நடித்து இருந்த களவாடிய பொழுதுகள் எனும் படத்தை இயக்கி இருந்தார். அதன் பின்னர் சில ஆண்டுகள் எந்த படங்களையும் இயக்காமல் இருந்து வந்தார்.
unknown nodeதற்போது மீண்டும் ஒரு படத்தை இயக்க உள்ளார். இப்படத்தை பி.எஸ்.என் எண்டெர்டைன்ட்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் தலைப்பு மற்ற அறிவிப்பை இன்று மாலை 5 மணிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட உள்ளார்.