தனது ஆபாச படங்களை வெளியிட்டுவிடுவதாக மிரட்டல் வருவதாக காவல் துறையில் புகார் கொடுத்த சின்னத்திரை நடிகை நிலானி!

Default Image

சின்னத்திரையில் பிரபல நடிகையாக இருந்தவர் நிலானி.இவர் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது காவல் துறையை அவதூறாக பேசியதால் சர்ச்சையில் சிக்கினார்.
தனது காதலனின் தற்கொலைக்கு இவர் தான் காரணம் என அனைவரும் கூறியதால் மனமுடைந்து தற்கொலைக்கு சென்று பின்னர் காப்பாற்றப்பட்டார்.இந்நிலையில் இவர் சென்னை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில் வெளிநாட்டில் வேலை பார்க்கும் ஒருவர் தனக்கு அறிமுகமானதாகவும் அவருக்கு திருமணம் ஆகவில்லை என கூறியதாகவும் தன்னை அவர் திருமணம் செய்ய விரும்பியதாகவும் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.
அதனால் அவரிடம் பலகியதாகவும் அவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தை இருப்பதை கண்டு பின்பு அவரை விட்டு விலக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் தன்னை ஆபாச படம் எடுத்து வைத்திருப்பதாகவும் அவர் கூறுவதை கேட்கவில்லை என்றால் அதை இணையத்தில் வெளியிடுவதாகவும் கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவரையும் அவரது குழந்தைகளையும் கொன்றுவிடுவதாகவும் அவரது நம்பரை அனைவருக்கும் கொடுத்து ஆபாசமாக பேசுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் அவருக்கும் அவரது பிள்ளைகளுக்கும் அந்த நபரால் ஆபத்து இருப்பதாகவும்  அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும் அந்த நபரிடம் உள்ள ஆபாச படங்களையும் போட்டோக்களையும் அளிக்க வேண்டியும் புகார் அளித்துள்ளதாக கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்