“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

பிரியங்கா பிரச்சனையில் மணிமேகலை கொஞ்சம் சகித்து போயிருக்கலாம் என ஷகிலா அவருக்கு அட்வைஸ் செய்துள்ளார்.

Shakeela about priyanka deshpande vs Manimegalai

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு இருக்க, பிரச்சனை முற்றுப்புள்ளி இல்லாமல் ரயில் போல பரபரப்பாக தொடர்ந்து கொண்டு இருக்கிறது. கடைசியாக,குரேஷி மற்றும் சுனிதா ஆகியோர் வீடியோ வெளியீட்டுப் பிரியங்கா மீது தவறு இல்லை என்பது போல அவருக்கு ஆதரவாகப் பேசி இருந்தார்கள்.

மற்றொரு, பக்கம் மணிமேகலைக்கு ஆதராகவும் ரசிகர்கள் சில பிரபலங்கள் பேசி வருகிறார்கள்.   இந்த சூழலில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களுக்கு மத்தியில் அம்மா என்று வேறு பரிமாணத்தில் பிரபலமான ஷகிலா நிகழ்ச்சியில் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை குறித்தும், மணிமேகலைக்குச் சின்ன அட்வைஸ் ஒன்றையும் செய்திருக்கிறார்.

தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய அவர் ” மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவரையும் எனக்கு நன்றாகத் தெரியும். ரொம்பவே பாசமானவர்கள் அவர்கள் இருவருமே நன்றாகச் சாப்பிடக்கூடிய பெண்கள். கிட்டத்தட்ட இருவருமே ஒரே மாதிரி தான். அப்படி இருக்கையில் எதோ ஒரு இடத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக தான் இப்படி பிரச்சனை நடந்திருக்கிறது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் “நான் மணிமேகலைக்குச் சொல்லிக்கொள்ளக்கூடிய ஒரே ஒரு விஷயம் என்னவென்றால், இந்த பிரச்சனையில் அவர் கொஞ்சம் சகிச்சு போயிருக்கலாம் என்பது தான். அப்படி சகித்துப் போயிருந்தால், கண்டிப்பாக அதற்கு அடுத்த எல்லா சீசன்களிலும் தொகுப்பாளர் வேலை மணிமேகலைக்குத் தான் வந்திருக்கும். குக் வித் கோமாளி இத்துடன் நிற்கப்போகும் ஒரு நிகழ்ச்சி இல்லை” எனவும் ஷகிலா மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.

மணிமேகலைக்குக் கோமாளியாக நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை விடத் தொகுப்பாளராகவேண்டும் என்பது தான் மிகவும் பெரிய ஆசை. ஆரம்பக் காலத்திலிருந்தே பல நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி இருக்கிறார். எனவே, ஆசை அப்படி இருக்கையில் இப்படியான பிரச்னை வரும் போது கொஞ்சம் சகித்து இருந்தால் அடுத்ததாக வரும் அனைத்து சீசன்களிலும் மணிமேகலை தான் தொகுப்பாளராக இருந்திருப்பார் என்பது ஷகிலாவுடைய கருத்து மட்டுமின்றி பலருடைய கருத்தாக இருக்கிறது.

ஆனால், தனக்கு அப்படிச் சகித்து ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, வாய்ப்பு கிடைக்கும் என்றால் அப்படிப் பட்ட நிகழ்ச்சியே, வேண்டாம் தனக்குக் காசு பணத்தை விடத் “தன்மானம்” தான் முக்கியம் என்று வெளிப்படையாகவே கூறி நிகழ்ச்சியை விட்டு மணிமேகலை வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்