என்னை அடிமையா வச்சிருந்தாங்க…ஜிவி-யை வச்சி செய்த செல்வராகவன்.!

selvaarkavan gv prakash

G. V. Prakash: ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு இசையமைக்கும் பொழுது, நான்கு நாட்களாக என்னை அடிமையா வச்சிருந்தாங்க என ஜிவி பிரகாஷ்  கூறியுள்ளார்.

இயக்குனர் செல்வராகவன் இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் கார்த்தி , பார்த்திபன் , ஆண்ட்ரியா ஜெர்மியா மற்றும் ரீமாசென் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் 2010-ல் வெளியானது.

இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசைமைத்திருந்தார். படத்தின் இசையே படத்திற்கு பிளஸ் பாய்ண்ட் என்றே சொல்லாம். சமீபத்தில், ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாகவும், இது பெரிய பட்ஜெட்டில் உருவாகும் என்றும் ஜிவி கூறியிருந்தார்.

மேலும், இந்த படத்திற்கான பணிகளைத் தொடங்க மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதே போல், இந்த படத்தில் தான் பணி புரிந்தது குறித்தும் பகிர்ந்து கொண்டார்.

இது தொடர்பாக ஜிவி பிரகாஷ் பேசுகையில், “ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இசையமைபின் போது, என்னை அடிமையா வச்சிருந்தாங்க…இயக்குனர் செல்வராகவன் பக்கத்திலையே உக்காந்து கொண்டு இருப்பார். முடிச்சு கொடுங்கனு சொல்லிகிட்டே உக்காந்து விடுவார் போகவே மாட்டார்.

அப்படி என்னை வைத்து செஞ்சாங்க நான்கு நாட்களாக ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்கு இசையமைத்தேன். அதே போல் தான் ‘மயக்கம் என்ன’ திரைப்படமும், 4 நாட்களாக வீட்டுக்கே போகாம வேலை செய்தோம் அப்படி வந்தது தான் பாடல்கள் இசைகள். அப்போ போடுறது தான் இசை என்று தெரிவித்ததோடு, அதெல்லாம் ஒரு மறக்க முடியாத தருணம் என்று கூறிஉள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்