#BREAKING : எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக உள்ளது

எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழ் திரைப்பட பாடகர் எஸ்.பி. கடந்த வாரம் அவர் கொரோனா பரிசோதனையை  மேற்கொண்டார்.

அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி சென்னை சூளைமேடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று  உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் ஐசியுவிற்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சையில் பெற்று  வருகிறார்  என்று மருத்துவமனை ஒரு அறிக்கையை வெளியிட்டது.அவர் விரைவில் குணமடைந்து மீண்டு வர திரையுலகினர் மட்டுமின்றி பலரும் தங்களது பிரார்த்தனைகளை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா பாதித்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

unknown node