எஸ். பி. பி-யின் நலனுக்காக திரையுலக பிரபலங்களின் புதிய முயற்சி.! வேண்டுகோள் விடுத்த பாரதிராஜா.!

எஸ். பி. பி பூரண நலம் பெற அவரவர் வீடுகளில் நாளை மாலை 6 மணிக்கு 1நிமிட மௌனமாக பிரார்த்தனை செய்யுமாறு பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எஸ். பி. பி பூரண நலம் பெற அவரவர் வீடுகளில் நாளை மாலை 6 மணிக்கு 1நிமிட மௌனமாக பிரார்த்தனை செய்யுமாறு பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சாதனை படைத்தவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.கடந்த 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் அவர் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள பாடகர் எஸ். பி. பிக்கு உயிர்காக்கும் எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், வென்டிலேட்டர் மூலம் அவரது உடல்நிலை குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளனர். இந்த நிலையில் எஸ்பிபி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப கமல்ஹாசன், பாரதிராஜா, சிவகுமார், ஏஆர். ரஹ்மான், இளையராஜா, ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் எஸ்பிபி அவர்கள் மீண்டு வருவதற்காக திரையுலக பிரபலங்கள் இணைந்து கூட்டு பிரார்த்தனை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து பாரதிராஜா வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது, மொழி வேறுபாடு இல்லாமல், இனம் வேறுபாடு இல்லாமல் ஒரு பொது கலைஞனுக்காக நாளை மாலை 6 மணிக்கு ஒரு நிமிடம் மெளனமாக பிரார்த்திக்கிறோம். அதன் பின் அவரது பாடல்கள் ஒலிப்பரப்பப்படும் என்றும், அதில் அவர் எழுந்து வருவார். மறுபடியும் அவரது குரல் ஒலிக்கும், மேலும் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடுவார். தயவுசெய்து அனைவரும் அவரவர் வீட்டிலிருந்து மெளன பிரார்த்தனை செய்யுமாறு கேட்டு கொண்டுள்ளார்.

unknown node