நியாயத்திற்கு மறு உருவமா பிறந்து வந்தவங்க அவங்க! இந்த உலகத்துலயே அவங்க மட்டும் தான் நியாயமா நடந்துக்குவாங்க!

Default Image

நடிகை வனிதா விஜயகுமார் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பின் ஒரு சில வாரங்களிலேயே அவர் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், மீண்டும் வைல்ட் கார்ட் எண்ட்ரீயாக வருகை தந்துள்ளார்.

இவர் இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததில் இருந்தே, பிக்பாஸ் வீடே கலவரக்காடாக தான் மாறியுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் தலையணை தைக்கும் போட்டி நடைபெற்றது. இதில் வனிதாவுக்கு, லொஸ்லியாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து, லொஸ்லியா கவினிடம், நான் நியாயமா தானே நடந்தேன் என கேட்கிறார். அதற்கு பதிலளித்த கவின், நியாயத்திற்கு மறு உருவமா பிறந்து வந்தவங்க அவங்க, இந்த உலகத்துலயே அவங்க மட்டும் தான் நியாயமா நடந்துக்குவாங்க என்று கூறியுள்ளார். வனிதாவால் இங்கு பேச முடியவில்லை என்றால், திருப்பி அடுத்ததாக பெர்சனலாக எதையாவது இழுத்துட்டு வந்துருவாங்க என்று கூறுகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்