எனது மகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.. விபத்தில் சிக்கிய ரம்பா வருத்தத்துடன் பதிவு.!

Default Image

பிரபல நடிகை ரம்பா கார் விபத்தில் சிக்கினார். அவரும் மூத்த குழந்தையும் உயிர் தப்பினர். இரண்டாவது குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

1990-களில் தமிழில் கலக்கி வந்த பிரபல நடிகை ரம்பா, இலங்கை யாழ்பாணத்தைச் சேர்ந்த தமிழ் தொழிலதிபரான இந்திரன் பத்மநாபனை என்பவரை திருமணம் செய்து கொண்டு கணவருடன் கனடாவில் செட்டில் ஆனார். ரம்பாவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்துச் செல்லும் போது, ரம்பா கார் மீது மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் அவரும், அவரது மூத்த மகளும் லேசான காயங்களுடன் உயிர் தப்பி இருக்கிறார்கள். ஆனால், பெரும் சோகம் என்னவென்றால், அவருடைய இளையமகள் சாஷா படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த செய்தியை ரம்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ‘பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்துச் செல்லும் வழியில் எங்கள் கார் மற்றொரு கார் மீது மோதியது! “நான் குழந்தைகளுடன் மற்றும் என் ஆயாவுடன்” நாங்கள் அனைவரும் சிறிய காயங்களுடன் பாதுகாப்பாக இருக்கிறோம், என் சிறிய சாஷா இன்னும் மருத்துவமனையில் இருக்கிறார் மோசமான நாட்கள் மோசமான நேரம் தயவுசெய்து எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உங்கள் பிரார்த்தனைகள் நிறைய அர்த்தம்’ என பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by RambhaIndrakumar???? (@rambhaindran_)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்