நடிகை ரம்பா இலங்கை யாழ்பாணத்தைச் சேர்ந்த தமிழ் தொழிலதிபரான இந்திரன் பத்மநாபனை என்பவரை திருமணம் செய்து கொண்டு கணவருடன் கனடாவில் செட்டில் ஆனார். ரம்பாவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று ரம்பா தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்துச் செல்லும் போது, ரம்பா கார் மீது மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
unknown nodeஇந்த விபத்தில் நடிகை ரம்பா விபத்தில் அவரும், அவரது மூத்த மகளும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்கள். இதில் அவருடைய இளையமகள் சாஷா படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே தன்னுடைய மகள் குணமடையவேண்டும் என நேற்று ரம்பா உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
unknown nodeRambha Car Accident [Image Source: Twitter ]
அதில் ‘என் சிறிய சாஷா இன்னும் மருத்துவமனையில் இருக்கிறார் மோசமான நாட்கள் மோசமான நேரம் தயவுசெய்து எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உங்கள் பிரார்த்தனைகள் நிறைய அர்த்தம்’ என பதிவிட்டுருந்தார்.
unknown nodeஅதனை தொடர்ந்து தற்போது நெகிழ்ச்சியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியீட்டுள்ள அந்த வீடியோவில் ரம்பா பேசியதாவது ” அனைவருக்கும் நன்றி, நாங்கள் விரைவில் குணமடைய வேண்டிய அனைவருக்கும் மிகவும் நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். நாங்க எல்லோரும் நலமாக இருக்கிறோம். சாஷா நலமாக இருக்கிறாள். நான் ரொம்ப கொடுத்து வச்சவ எல்லாரும் எனக்காக பிராத்தனை செய்றீங்க. எனக்கு சொல்வதற்கு வார்த்தைகள் எதுவும் இல்லை என உருக்கத்துடன் கூறியுள்ளார்.