மீண்டும் உறுதியானது மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன்! ஐஸ்வர்யா ராய் கொடுத்த விளக்கம்!

Default Image
இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படம்  பிரமாண்டமாக உருவாக உள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம்மிகுந்த பொருட்செலவில் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், அமிதாப்பச்சன், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யாராய் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளனர். இதற்கான கதை விவாதத்தில் இயக்குனர் மணிரத்னம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் நடிகர் நடிகை ஐஸ்வர்யாராய் சென்னையில் உள்ள ஒரு தனியார் கடிகார கடை திறப்பு விழாவிற்காக வந்துள்ளார்.  அப்போது  பொன்னியின் செல்வன் படத்தை உறுதிப்படுத்தும் விதமாக பேசியுள்ளார்.
அவரிடம் பொன்னியின் செல்வன் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘ மணிரத்னம் சார் இயக்கத்தில் நடிப்பது எப்போதும் சிறப்பான விஷயம். ‘ என தெரிவித்து விட்டு சென்றார். பொன்னியின் செல்வன் உருவாவது இந்த செய்தி மூலம் உறுதியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்