சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த அனுமதியளிக்க வேண்டும்! அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து நடிகை குஷ்பு வேண்டுகோள்!

Default Image

சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த அனுமதியளிக்க வேண்டும் என நடிகை குஷ்பூ கோரிக்கை. 

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த, இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, இந்தியா முழுவது, மே-17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதனால், ரிலீசுக்கு தயாராக இருந்த திரைப்படங்கள், படப்பிடிப்பு என அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இதனால், திரையரங்குகளும் மூடப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவால், பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவரும் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் சின்னத்திரை சங்கம் சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து நடிகை குஷ்பு சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த அனுமதியளிக்க வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்