நடிகர் அஜித் குறித்து நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். ரசிகர்கள் அவர் மீதுள்ள அன்பால் தல என்று அழைக்கின்றார்கள். இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
unknown nodeஇந்நிலையில், அஜித் குறித்து பலர் பெருமையாக புகழ்ந்து கூறுவது உண்டு அந்த வகையில், நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அப்போது ரசிகர்க ஒருவர் அஜித் அவர்களை பற்றி கேட்டுள்ளார்.
unknown nodeஅதற்கு பதிலளித்த பார்த்திபன் “ஜித்து போன்ற கதைகள் கெத்து போன்ற கதைகள் யோசித்தால் நண்பர் அஜித் ஞாபகம் வரும்…ரொம்ப பவர்புல்லான நடிகர் அவர்.. அவர் பெயரை சொல்லும்போதே அரங்கத்தில் விசில் மற்றும் கைதட்டல் சத்தம் நிற்க சில நிமிடங்கள் ஆகும்…நடிகைரை மீறி ஒரு ஸ்டாராக மாறுவது ஒரு சிலருக்கு மட்டுமே நடக்கும்..அது நண்பர் அஜித்திற்கு இருக்கிறது மகிழ்வான விசியம்.
unknown nodeநான் அவரை சந்தித்து பல வருடங்கள் ஆகிவிட்டது…நீ வருவா என படத்தின் போட்டோஷுட் காக மட்டும் தான் கைகொடுப்பது போன்ற விசியங்கள் நடந்தது.. ஒன்றாக நடிக்கும் காட்சி இல்லை.. அதன் பிறகு அவரை சந்திக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கல… ஒரு நல்ல கதை அமையும்..அதற்கான வாய்ப்பும் அமையும்.” என கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
unknown node