பிக்பாஸ் என்றலே எல்லாருக்கும் உடனே ஞாபகத்திற்கு வருபவர் என்றால் நடிகை ஓவியா தான். பிக்பாஸ் இரண்டு சீசன்கள்முடிந்து கடந்து விட்ட நிலையிலும் இன்னும் தமிழ் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்து இருப்பவர் ஓவியா இவருக்கு என்று ஆர்மி படைகள் எல்லாம் உருவானது.
unknown nodeஇந்த படை தங்கள் தலைவி ஓவியா என்று பெருசு முதல் சிருசு வரை தங்களை ஆர்மி படை என்று பெருமையாக சொல்லி கொண்டு திரிந்தனர்.இந்நிலையில் தங்கள் தலைவியை யாராவது சண்டைக்கு இழுத்தால் அங்கு முதல் ஆளாக ஆர்மி நின்று அவருக்கு கை கொடுத்தது.
unknown nodeஇந்நிலையில் தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது.என்னவென்றால் மீண்டும் சின்னத்திரைக்குள் வர உள்ளாராம் ஓவியா.பிரபல தனியார் தொலைக்காட்சியான கலர்ஸில் தொடங்கப்பட உள்ள நடன நிகழ்ச்சியில் நடுவராக களமிறங்க உள்ளாராம் தலைவி ஓவியா. இந்த நிகழ்ச்சிக்கு ஏற்கனவே நடன இயக்குனர் பிருந்தா மற்றும் நடிகர் நகுல் நடுவராக அறிமுகப்படுத்தப் பட்டுவிட்டனர்.
unknown nodeஇந்நிலையில் மூன்றாவது நடுவரை இதுவரை சஸ்பென்ஸாக வைத்திருந்தனர்.அதுவும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஓவியா நடுவராக களமிரங்குகிறார்.இந்நிகழ்ச்சி இம்மாத 24ஆம் தேதி துவங்கப்பட உள்ளது. இதற்கிடையே இப்பொழுதே ஆர்மி படைகள் அலட்டாகி உள்ளனர் தங்களின் தலைவியை வரவேற்க என்பது குறிப்பிடத்தக்கது.
unknown nodeDINASUVADU