இதுக்கு மேல யாருட்டையும் வாய்ஸ் ரெய்ஸ் பண்ண விரும்பல – பாலாஜி.!

Balaji, who left a series of questions to Aari in the call center task, said that he did not want anyone to voice his voice over this.

கால் சென்டர் டாஸ்க்கில் ஆரியிடம் அடுக்கடுக்காக கேள்விகளை பாலாஜி முன் வைத்து விட்டு வெளியே வந்தவர் இதுக்கு மேல யாருட்டையும் வாய்ஸ் ரெய்ஸ் பண்ண விரும்பல என்று கூறியுள்ளார்.

கடந்த வாரம் கால் சென்டராக மாறிய பிக்பாஸ் வீட்டில் கால் சென்டர் ஊழியராக பாலா, சம்யுக்தா, ஷிவானி,அஜீத்,கேபி, ஜித்தன் ரமேஷ் ,அனிதா ஆகியோர் வேலை செய்ய அவர்களை மற்ற போட்டியாளர்கள் கேள்வி கேட்க பிக்பாஸ் வீடே சண்டை களமாக மாறியது.க்ஷ.இந்த நிலையில் இந்த வாரமும் கால் சென்டர் டாஸ்க் தொடர்கிறது.இதில் கால் சென்டரில் வேலை செய்யும் ஊழியர்களாக நிஷா, அர்ச்சனா,ஆரி,சனம்,ரியோ,சோம் ஆகியோர் உள்ளனர்.அவர்களிடம் வாடிக்கையாளர் கேட்கும் கேள்விகளுக்கு வரம்பு எதுவும் இல்லை அவ்வாறு வாடிக்கையாளர்கள் ஊழியரை வெறுப்பேற்றும் படி பேசி அவரே போன் காலை துண்டிக்கும் படி செய்ய வேண்டும்.இல்லையெனில் அவர்கள் நேரடியாக நாமினேஷனுக்கு நாமினேட் செய்யப்படுவார்கள்.

அதன்படி ஒவ்வொரு போட்டியாளர்களும் நேருக்கு நேர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.அந்த வகையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் பர்ஸ்ட் புரோமோவில் பிக்பாஸ் கால் சென்டரில் ஊழியராக உள்ள ஆரியிடம் பாலாஜி கால் செய்து ஆரியை வெறுப்பேற்றும் படி பல கேள்விகளை எழுப்பினார்.இருவரின் கேள்விகளும் முடிந்த பின்னர் வெளியே வந்த ஆரி நான் பதில் சொல்ல கூடாது ,அவன் கருத்து மட்டுமே வெளிய வரணும் ,அதுவும் எனக்கு எதிராக இருக்கணும் என்று பாலாஜி நினைக்கிறார் . இதிலிருந்து பாலாஜி தனக்கு எதிராக ஆரி கூறியதை எல்லாம் கேள்வியாக கேட்டு அவரை பதில் சொல்ல முடியாமல் செய்துள்ளார் என்று தெரிகிறது.மேலும் பாலாஜி இதுக்கு மேல யார் கிட்டையும் வாய்ஸ் ரெய்ஸ் பண்ண விரும்பல என்று கூறுகிறார்.இதோ அந்த வீடியோ

unknown node