#CINEMA BREAKING: நாளை "மாநாடு" ரிலீஸ் இல்லை: சுரேஷ் காமாட்சி ட்வீட்..!

தவிர்க்க இயலாத காரணங்களால் மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

தவிர்க்க இயலாத காரணங்களால் மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

சிலம்பரசன் நடிப்பில் நாளை ரிலீஸ் ஆக இருந்த திரைப்படம் மாநாடு. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் ஹீரோயினாக நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார். மேலும், எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம் ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் என பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டரில் “நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன் தவிர்க்க இயவாத காரணங்களால் மாநாடுவெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன் ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்” என ட்விட் செய்துள்ளார்.

சிலம்பரசன்  ரசிகர்கள் நாளை ரிலீஸை எதிர்பார்த்த நிலையில் மீண்டும் தள்ளிப்போகிறது.

unknown node