தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகரான செந்தில் ட்வீட்டரில் இணைந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக முந்தைய காலகட்டத்தில் கொடி கட்டி பறந்தவர் தான் செந்தில். இவர் மற்றும் கவுண்டமணி காம்போ பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். இப்போதும் இவர்கள் ரசிகர்கள் பலரின் பேவரட்டாக உள்ளார். இந்த நிலையில் தற்போது இவர் டுவிட்டரில் புதிதாக இணைந்துள்ளார். இதனை அவர் ஒரு பதிவோடு வெளியிட்டுள்ளார்.
அதில், நான் உங்கள் காமெடி நடிகர் செந்தில். கொரோனா வைரஸ் பரவுவதால் அனைவரும் வீட்டிலையே இருக்குமாறு கேட்டு கொள்கிறேன். கடைசியாக நான் சூர்யா தம்பியுடன் தான் சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்தேன். கூடிய விரைவில் இன்னும் பல படங்களில் நடித்து உங்களை சந்தோஷம் ஆக்குவேன் என்று நம்புகிறேன். அதுவரை உங்களுடன் தொடர்பில் இருக்க ஆசை பட்டேன். எனவே நான் தற்போது டுவிட்டர் அக்கவுண்ட் தொடங்கி உள்ளேன் என்று பதிவிட்டுள்ளார். தற்போது இவரை அவரது ரசிகர்கள் அனைவரும் வரவேற்று கமென்ட் செய்து வருகின்றனர்.
unknown node