மணிமேகலை vs பிரியங்கா : “தப்பா பேசுறவங்கள செருப்பால அடிக்கணும்”…வெங்கடேஷ் பட் ஆதங்கம்!

மணிமேகலை மற்றும் பிரியங்காவுக்கு இடையேயான பிரச்சனையில் இருவரையும் தப்பாக பேசுபவர்களை செருப்பால் அடிக்கவேண்டும் என செப் வெங்கடேஷ் பட் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.

venkatesh bhat about Manimegalai vs priyanka deshpande

சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங் செய்யும் விஷயத்தில், ஏற்பட்ட ஈகோ பிரச்சினை காரணமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியிருந்தார்.

நிகழ்ச்சியில் தன்னுடைய வேலையைச் செய்யவிடாமல் பிரியங்கா தடுத்ததாகவும், தொகுப்பாளராக அவருடைய, ஆதிக்கத்தைச் செலுத்தியதாகவும், குற்றச்சாட்டை முன் வைத்து நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியிருந்தார். இதன் காரணமாக மணிமேகலைக்கு ஆதரவு அதிகமாகக் குவிந்து பிரியங்காவுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

அவர் மீது வைக்கப்பட்டுள்ள விமர்சனங்களும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்றும் சொல்லலாம். அதற்கு முக்கிய காரணம், அவருடன் நெருக்கமாகப் பழகி வந்த பிரபலங்கள் சிலர் அவர் அந்த மாதிரி குணம் கொண்டவர் இல்லை என ஆதரகவா பேசி வருவது தான். குறிப்பாக, அமீர், பாவனி, குரேஷி உள்ளிட்ட பிரபலங்கள் பேசியிருந்தார்கள்.

இந்த விவகாரம் குறித்து இன்னும் பிரியங்கா தரப்பிலிருந்து எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை.அவர் விளக்கம் கொடுத்ததே, இன்னும் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி கிடைக்காத முக்கிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. அவர் இதனைப் பற்றி மௌனம் காத்து வந்தாலும் கூட இந்த பிரச்சனை அவர்கள் இருவருக்கும் அவர்கள் பேசி முடித்துக்கொள்வார்கள் நடுவில் பலர் விமர்சித்துப் பேசுவது நியாமில்லாதது என்பது தான் பலருடைய கருத்தாகவும் இருக்கிறது.

அப்படி தான் செப் வெங்கடேஷ் பட்டும் கூறியிருக்கிறார். பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான பிரச்சினை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் வெங்கடேஷ் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது “பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருமே மிகவும் கடினமாக உழைத்து இவ்வளவு பெரிய இடத்திற்கு வந்திருக்கிறார்கள் .

அவர்கள் இருவருக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் சண்டை வந்திருக்கிறது. அந்த சண்டையை, அவர்களே பேசி தீர்த்துக் கொள்வார்கள். இன்னும் பிரியங்கா இதனைப் பற்றி பேசாமல் இருக்கிறார். விரைவில், பேசி முடிவெடுப்பார்கள் என நான் நினைக்கிறேன். இவர்களுடைய பிரச்சனையை, நான் எப்படிப் பார்க்கிறேன் என்றால் ஒரு குடும்பத்தில் அக்கா,தங்கைகளுக்கு இடையே வருவது போலத் தான்.

இதில் மூன்றாவதாக நூறு பேர் தப்பு தப்பாகப் பேசி அதனை வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள். அப்படிச் செய்வது மிகவும் மோசமான விஷயம். அப்படி இருவரையும் பார்த்து தப்பாகப் பேசுகிறார்களே அவர்களை எல்லாம் செருப்பால் அடிக்க வேண்டும்” எனத் தனது ஆதங்கத்தைக் கொட்டி தீர்த்தார்.

வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மிகவும் நெருங்கி மகள் போல் பழகி வந்தது மணிமேகலையுடன் தான். இந்த விஷயம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். எனவே பிரியங்கா பிரச்சினையில் அவர் மணிமேகலை பக்கம் நிற்பார் அவருக்கு, ஆதரவாகத் தான் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு சாதாரணமான மனிதராக தன்னுடைய அசத்தலான கருத்தைத் தெரிவித்துள்ளதாகவும், நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்