“நாம தான் முட்டாள் ஆயிருவோம்”! மணிமேகலை-பிரியங்கா சர்ச்சையை குறித்து பேசிய KPY சரத்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட KPY சரத் மணிமேகலை-பிரியங்கா சர்சையைக் குறித்து விளக்கமளித்துள்ளார்.

KPY Sarath

சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை – பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே தான் இருக்கிறது. சிறிய அளவில் ஏற்பட்ட ஒரு ஈகோ பிரச்சினை தற்போது தொடர்ந்து 2-வது வாரமாக இணையத்தில் பேசும் பொருளாகவே இருந்து வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக பல விஜய் டிவி பிரபலங்கள் பல கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர், குறிப்பாக குரேஷி, அமீர், பவானி போன்றவர்கள் ப்ரியங்காவிற்கு ஆதரவாக பேசினார்கள். இருப்பினும் இதுவரை இந்த விவகாரம் குறித்து பிரியங்கா தரப்பிலிருந்து எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.

இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி கிடைக்க வேண்டுமென்றால் பிரியங்கா – மணிமேகலை இருவரும் அவர்களுக்குள் பேசி முடித்துக் கொள்ள வேண்டும் என்பது தான் இங்கு பலருடைய கருத்தாகவும் இருக்கிறது. இப்படி இருக்கையில் விஜய் டிவி குடும்பத்தில் உள்ள மற்றொரு உறுப்பினரான KPY சரத் இந்த சம்பவம் தொடர்பாக பேசி இருக்கிறார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு விளக்கமளித்து பேசியிருக்கிறார். தற்போது தமிழ் காமெடி நடிகரான சதீஸ் நடிப்பில் திரையில் வெளியாக இருக்கும் “சட்டம் என் கையில்” எனும் திரைப்படத்தில் KPY சரத் நடித்திருக்கிறார். இந்த படத்தின் ப்ரோமோஷன்காக,  படக்குழு பிரஸ் மீட் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

அந்த நிகழ்ச்சியில் KPY சரத் கலந்து கொண்டார்.  அங்கு அவரிடம் பிரியங்கா -மணிமேகலை சர்ச்சைக்கு நீங்கள் யார் பக்கம் ஆதரவு செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் நான் யாருக்கும் சப்போர்ட் இல்லை என கூறியிருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், “இது நாட்டுக்கு தேவையான பிரச்சனை கிடையாது. உண்மையைச் சொல்லப் போனால் இந்த சம்பவம் பற்றி வீடியோ வெளியிட்டவர்கள் நன்றாகவே சம்பாதித்து விட்டனர், சம்பாதித்து கொண்டும் இருக்கின்றனர். அதைப் பார்க்கின்ற நாம் தான் ஒன்றுமில்லாமல் இருக்கிறோம்.

அதனால் நான் மீண்டும் சொல்கிறேன், இது முக்கியமான விஷயம் கிடையாது.  நான் யாருக்கும் சப்போர்ட் இல்லை, யாருக்கு சப்போர்ட் செய்யவும் எனக்கு மனதில்லை. அவர்கள் இருவரும் இன்றைக்கு அடித்துக் கொள்வார்கள், நாளை சேர்ந்து கொள்வார்கள்.

அப்போது நாம் தான் முட்டாளாக இருப்போம். அதனால் அந்த பிரச்சினையை பற்றி நான் பேச விரும்பவில்லை”, என பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து கூறியிருந்தார். இந்த கருத்துக்கு அதிகமானோர் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள், ‘இவர் கூறுவது சரிதான்’ என இவருக்கு ஆதரவாகவே கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்