ரஜினியை சந்தித்த கேரள இளைஞர் ! சமூக வலைத்தளத்தில் வைரலாகும் புகைப்படம்

கேரள மாநிலம் இயற்கை பேரிடரான புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது.எனவே அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் முதல்வரின் நிவாரண நிதிக்கு மக்கள் தாராளமாக நிதியை

கேரள மாநிலம் இயற்கை பேரிடரான புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது.எனவே அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் முதல்வரின் நிவாரண நிதிக்கு மக்கள் தாராளமாக நிதியை வழங்கலாம் என்று தெரிவித்தார்.இதனால் ஆலந்துறை சேர்ந்த பெயிண்டர் பிரணவ் என்பவர் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்தார்.அப்போது முதல்வரிடம்  நிவாரண நிதி வழங்கினார்.

இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை கேரள முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

இந்தநிலையில்  கேரளாவை சேர்ந்த மாற்றுத் திறனாளி இளைஞர் பிரணவ் நடிகர் ரஜினிகாந்தை  சந்தித்தார்.அவருடன் ஃசெல்பி எடுத்து கொண்டார் ரஜினிகாந்த்.ரஜினியை சந்தித்து அவருக்கு நினைவு பரிசை வழங்கினார்.தற்போது இந்த புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.