கருத்து தெரிவித்து கண்ணியில் சிக்கிய கருணாகரன்….!!!

Default Image

தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகளுக்காக, ரசிகர்கள் மத்தியில் சண்டை வருவது சகஜம் தான். ஆனால் சில பிரபலங்கள் சீண்டி வருகிற சண்டை ரசிகர்களுக்கும் அவர்களுக்கும் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில் நடிகர் கருணாகரன் கடந்த சில நாட்களாக நடிகர் விஜய் ரசிகர்களுடன் சண்டை போட்டு வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. விஜய்யினுடைய ரசிகர்கள் இவ்வளவு மோசமாக நடந்து கொள்வதால் தான் எனக்கு விஜயை பிடிக்காமல் போனது என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து தற்போது மீண்டும் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். ” ஒரு நடிகரின் ரசிகர்கள் போடும் கமெண்டை வைத்து தான் அந்த நடிகரின் தரத்தை சொல்ல முடியும் .” என்று ட்விட் செய்துள்ளார். இது மீண்டும் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ட்வீட்டை பார்த்த அஜித் – விஜய் ரசிகர்கள் மீண்டும் மோதலில் இறங்கியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்